2025 ஜூன் 21, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களின் தேசியத் தலைவராக அலிஸாஹிர் மௌலானா தெரிவு

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளன பணிப்பாளர் தெரிவுக்கான தேர்தலில், ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தேசியத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் திட்ட அலுவலர் செல்வி ஸ்ரீவாணி அறிவித்துள்ளார்.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் நான்காவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் பணிப்பாளர் தெரிவுக்கான தேர்தலும் கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிலையத்தின்; மஹிந்த சில்வா அரங்கில் இன்று சனிக்கிழமை (11)  இடம்பெற்றது.

அலிஸாஹிர் மௌலானா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், ரணில் விக்கிரமசிங்ஹ பிரதம மந்திரியாக இருந்தபோது அவரது பிரதம ஆலோசகராகவும்  பணியாற்றயவர் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .