2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர்

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று (02) பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தனது செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்,  திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், கடந்த திங்கட்கிழமை  பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார். 

வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X