Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 மார்ச் 12 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
“பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைப்பீடம் தவிர்ந்த, ஏனைய கலைப்பீட மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் யாவும், காலவரையற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” என்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், “விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும், விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்” எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (10) இரவு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களுக்கிடையில் குழப்பநிலை ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை (11) இடம்பெறவிருந்த கலைத்துறை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வைக் கொண்டாட வேண்டாம் என, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. எனினும், அறிவித்தலைப் புறக்கணித்து, வரவேற்பு நிகழ்வை மாணவர்கள் கொண்டாடினர்.
இதையடுத்து, பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் காலவரையற்று நிறுத்தப்பட்டுள்ளன எனவும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
10 minute ago
22 minute ago
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
41 minute ago
56 minute ago