Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2022 ஜனவரி 09 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், இன்று காலை, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்தார்.
விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே, இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.
வீட்டிலிருந்து தோட்டத்துக்கு நடந்து சென்ற சிறுவன் கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார்.
சிறுவனை காணாத பெற்றோர், சிறுவனை எங்கும் தேடிய நிலையில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சடலத்தை மீட்ட பொலுஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
20 minute ago