Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
வடமராட்சி பகுதியில், சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில், 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற கரணவாய் தெற்கு - மண்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் கிருசிகன் (வயது 16) என்ற நிறுவன, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
உடல் நலக் குறைவு காரணமாக, வெள்ளிக்கிழமை(01) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .