Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 30 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரத்தில் உள்ள வராலற்றுச் சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28ஆம் திகதி வணக்கத்திற்குரிய கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரை, வவுனியா - கண்டி வீதியில் உள்ள விகாரையை இன்று (30) காலை வந்தடைந்தது.
அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.
குறித்த பாதயாத்திரையில் 50இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள், மறைந்த பௌத்த பிக்குகளின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று, அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை போயா தினத்தன்று, விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.
பௌத்த கலை, கலாசார பாரம்பரியத்துடன் குறித்த பாதயாத்திரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
42 minute ago
42 minute ago