Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
நயினாதீவு பகுதியில், கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நயினாதீவு - 3ஆம் வட்டாரப் பகுதியில், இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர், 2ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த நடராஜா தர்மபாலன் (வயது 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சென்று விட்டு வருவதாக சென்றவர், கடந்த 9 நாள்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே, இன்று சடலமாக மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago