2025 மே 15, வியாழக்கிழமை

நீர்வேலியில் கட்டுத்துப்பாக்கி மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

நீர்வேலிப் பகுதியில் உள்ள காட்டுக்குள் இருந்து, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி மிருகங்களை வேட்டையாடுவதற்கு அல்லது வேறு ஏதாவது சட்டவிரோத செயல்களுக்காக இங்கு  மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .