Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல், இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது.
கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26), கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில், கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. அத்துடன், அவரது அஸ்தி அல்லாரை புதிய செபமாலை அன்னை தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுயாதீன ஊடகவியலாளரான, பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago