Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிக்குமார் யோகாதேவி வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் உடுவில் - கந்தேரோடை பகுதியில், நேற்று (27) இரவு 8.25 மணியளவில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர், வீட்டு வாயில் படலைக்குள் வந்து 3 பெற்றோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று, பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.
தானும் வெளிநாட்டிலிருந்து வந்த தனது மகள், குழந்தைகள் என அனைவரும் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த போது, இச்சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், தெய்வாதீனமாக எந்தப் பாதிப்புகளுமின்றி தாம் தப்பித்ததாகவும் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில், சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago