2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’பொலிஸ் சேவையில் இணைய தமிழ் இளைஞர்கள் முன்வரவேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் இளைஞர்கள், பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டுமென, யாழ்ப்பாணா் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் தல்துவ தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 125 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில், இன்று (31) நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் படித்து நல்ல நிலைக்கு வந்தப் பின்னர், பொலிஸ் சேவையில் இணைவதன்  மூலம், தங்களுடைய பகுதி மக்களுக்கு சேவையாற்ற முடியுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .