Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூடைகளுக்குள் 6 கிலோகிராம் கஞ்சா கடத்த முற்பட்டக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவன் பகுதியில், கஞ்சா கடத்தப்படுவதாக, சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோகிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago