Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, சட்டத்தை கையில் எடுத்த பொது பல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், சனிக்கிழமை (05) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டமானது, எவ்வி அரசியலையும் கலக்காது, ஒன்றுபட்ட தமிழினத்தின் உணர்வலைகளை அரசாங்கத்துக்கு உணர்த்தும் வகையில் இடம்பெறவுள்ளது.
இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டுக் குழுவினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
32 minute ago
33 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
33 minute ago
51 minute ago
57 minute ago