Editorial / 2023 ஜூலை 30 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் சனிக்கிழமை (29) அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது சனிக்கிழமை (29) அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் என்பனவற்றை உடைத்து சேதமாக்கியுள்ளதுடன், தங்கி இருந்த மாணவன் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago