Janu / 2026 மே 03 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரின் சடலம், ஒரு நாளுக்கு பிறகு களுத்துறை தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹஹேன மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியையாக பணியாற்றி வந்த பண்டாரகம, வீதியகொட, கனத்தகொட பகுதியை சேர்ந்த நதீஷானி தரங்கிகா அமரநாயக்க (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான இவரின் கணவர், பிரசித்த பாடசாலையொன்றில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

15 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago