Editorial / 2019 மே 15 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எம். றொசாந்த்
யாழ்ப்பாணத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் இலத்திரனியல் பொருள்களுடன் நடமாடிய ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இன்று (15) காலை, இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் வந்த குறித்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர், அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன், அவரது உடமைகளையும் சோதனை செய்தனர்.
இதன்போது, அவரது உடமையில் இருந்து, சில இலத்திரனியல் பொருள்களை இராணுவத்தினர் கைப்பற்றினர்.
இதையடுத்து, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
12 minute ago
18 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
58 minute ago