2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வடக்கில் மேலும் 10 பேருக்கு தொற்று

Niroshini   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன் 

வடக்கு மாகாணத்தில், நேற்று  (07),  10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில், 155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் என, யாழ். மாவட்டத்தில், ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 3 பேருக்கும், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவருக்கும், வவுனியா  மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .