2025 மே 02, வெள்ளிக்கிழமை

வரணியில் விபத்து: மூவர் படுகாயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன் 

தென்மராட்சி - வரணிப் பகுதியில், இன்று (12) மதியம், பயணிகள் சிற்றூர்தியும் டிப்பர் வாகனமும்  மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 படுகாயமடைந்தவர்கள், வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சிற்றூர்தியின் பின்பக்கமாக டிப்பர் வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

 விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X