2025 ஜூன் 21, சனிக்கிழமை

உதயன் ஆசிரியரின் ஆணைகோர் மனுவின் வாதப்பிரதிவாதம் டிசம்பர் 10இல் நடைபெறும்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 31 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

யாழ்ப்பாணம் நீதவான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தேவையில்லாத தலையீடு பற்றி உதயன் பத்திரிகை ஆசிரியர் முறைப்பாடு செய்து தாக்கல் செய்துள்ள ஆணைகோரும் மனு, தொடர்பான வாதப்பிரதிவாதம் டிசம்பர் 10இல் நடைபெறுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்;று புதன்கிழமை அறிவித்தது.

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைகள் மேற்கொள்ள சட்டமா அதிபரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்று யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ.குகநேசன் தெரிவித்திருந்தார்.


குறித்த வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்காக சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் அதனால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்ட விடயத்தில் சட்டத்தரணி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதால் விசாரணைகள் மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையிலேயே உதயன் பத்திரிகை ஆசிரியரின் ஆணைகோரும் மனு, தொடர்பான வாதப்பிரதிவாதம் டிசம்பர் 10இல் நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .