2025 ஜூன் 28, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் வைத்திருந்தவருக்கு 2,25,000 ரூபா தண்டம்

Kogilavani   / 2014 மார்ச் 19 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கசிப்பு உற்பத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்கள், கோடாக்கள் வைத்திருந்தமை மற்றும் மன்றில் சுற்றவாளியெனக் பொய் கூறியமை ஆகிய குற்றங்களுக்காக கிளிநொச்சி திருவையாறு பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 2,25,000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் புதன்கிழமை (19) உத்தரவிட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

கிளிநொச்சி திருவையாறு பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் 46 போத்தல் கோடாகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிஸாரால் கடந்த 2010 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் மேற்படி நபரை ஆஜர்ப்படுத்திய வேளை, மன்றில் தான் சுற்றவாளியென சட்டத்தரணி மூலம் தெரிவித்திருந்த நிலையில் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேற்படி வழக்கு தவணை முறையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மீண்டும் புதன்கிழமை(19) மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபர் குற்றவாளியென நீதவானால் அடையாளங் காணப்பட்டார்.

இதனையடுத்து சுற்றவாளியென பொய்கூறியமை மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 1,25,000 ரூபாவும், 46 போத்தல் கோடாக்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 1,00,000 ரூபாவும் தண்டம் விதித்ததுடன், இவற்றினைச் செலுத்தத் தவறின் 18 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .