2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சட்டத்தினை மீறிச் செயற்பட்ட 39 வர்தகர்கள்: 1 இலட்சத்து 51 ஆயிரம் தண்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழில் காலாவதியான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்த 39 வர்த்தகர்களுக்கு எதிராக பிரதேச நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்களிற்குட்பட்ட வர்த்தகர்களுக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை புதன்கிழமை (2) அறிவித்துள்ளது.

மேற்படி மூன்று நீதிமன்ற எல்லைகளுக்குள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த செப்டெம்பர் மாதம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களுக்காக 39 வர்த்தகர்களுக்கு எதிராக அந்தந்த பிரதேச  நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்பிரகாரம், யாழ்ப்பாண நீதிமன்ற எல்லைக்குள் பிடிக்கப்பட்ட 8 வர்த்தகர்களுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி தலா 10 ஆயிரம் ரூபாய்ப்படி 80 ஆயிரம் தண்டமும், சாவகச்சேரி நீதிமன்றத்திற்குட்பட்ட எல்லைக்குள் பிடிக்கப்பட்ட இரண்டு வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றம் தலா 10 ஆயிரம் ரூபாய்ப்படி 20 ஆயிரம் ரூபா தண்டமும், மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குள் பிடிக்கப்பட்ட 29 பேருக்கு மல்லாகம் நீதிமன்றம் 51 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .