2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

6 மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.ஆவரங்கால் சந்தியில் கடந்த 6 மாதங்களிற்கு முன்னர் திருடப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வல்வைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

ஆவரங்கால் சந்தியில்  அமைந்துள்ள பலசரக்குக் கடையொன்றில் பொருட்கள் வாங்கச் சென்ற அப்பகுதியினைச் சேர்ந்த உமாசுதன் (வயது 22) என்பவருடைய மோட்டார் சைக்கிள் கடந்த 6 மாதங்களிற்கு முன்னர் திருடப்பட்டிருந்தது.

மேற்படி மோட்டார் சைக்கிளானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வல்வைப் பகுதியில் இராணுவ முகாமிற்கு அருகில் விடப்பட்டிருந்தது.

இராணுவத்தினர் அச்சுவேலி பொலிஸாருக்கு வழங்கிய தகவலினைத் தொடர்ந்து மேற்படி மோட்டார் சைக்கிளைனை பொலிஸார் மீட்டனர்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .