2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அதிகஸ்டம், கஸ்டப் பிரதேச அதிபர், ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன், எஸ்.சொரூபன்
 
வடமாகாண ஆளுநரின் அனுதியின் கீழ், வலயக் கல்வித் திணைக்கள கட்டமைப்புக் குழு, மாகாணக் கல்வித் திணைக்கள கட்டமைப்பு குழு ஆகிவற்றின் சிபாரிசுக்கு அமைவாக வட மாகாணத்தில் அதிகஷ்டம் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்விகற்பிக்கும் அதிபர் ஆசியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதியிலிருந்து வழங்கப்படவுள்ள இந்தக் கொடுப்பனவினை, அதிகஷ்டப் பிரதேசத்திலுள்ள 363 பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு ரூபா 2500 உம் கஷ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள 138 பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு ரூபா 1500 உம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.
 
இதற்குத் தகுதியான பாடசாலைகளின் விபரங்கள் ஏற்கனவே வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
 
தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களின் விபரம் வருமாறு...

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X