2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களுக்கு சிகரெட்டும் சட்டவிரோத மதுவும் விற்பனை செய்தவர்களுக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த  மற்றும் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிரான 220 வழக்குகளில் 3 இலட்சத்து 91 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக சங்கானை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

சங்கானை மதுவரி நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த மற்றும் சட்டவிரோத மதுபானம்  விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவர்களுக்கு எதிராக வழக்குகள் ஊர்காவற்றுறை மற்றும் மல்லாகம் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டபோது, இரு நீதிமன்றங்களினாலும் 3 இலட்சத்து 91 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .