2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அளவெட்டி சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸார்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

அளவெட்டியில் இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிள்  சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பொய்யென விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்த தெல்லிப்பழை பொலிஸார் முறைப்பாட்டாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவர் மதுபோதையில் சென்றே மோட்டார் சைக்கிளை வீழ்த்தியதாக விசாரணைகளின் பின்னர் தெரியவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளவெட்டி பினாக்காய் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் கடந்த 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிள் தாக்கப்பட்டதாகவும் தான் அதிலிருந்து தப்பிவிட்டதாகவும் எனினும் தன்னிடமிருந்த 20 ஆயிரம் ரூபாவை அபகரித்து சென்றுவிட்டதாக மோட்டார் சைக்கிளினை செலுத்திச்சென்ற வவுனியா செட்டிக்குளத்தினைச் சேர்ந்த நபர்  தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், யாழ். புதிய சந்தையில் கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளினை இரவலாக பெற்று மதுபோதையில் அதனைச் செலுத்திச் சென்ற போதே அந்த மோட்டார் சைக்கிள் சேதமாக்கியுள்ளது. அதனை மூடி மறைப்பதற்கே முறைப்பாட்டாளர் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

இளைஞர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .