2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

குழந்தைகளுக்கான 'பாதுகாப்பு' ஓய்வூதிய திட்டம் ஆரம்பம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையுடன் இணைந்த நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள குழந்தைகளுக்கான 'பாதுகாப்பு' ஓய்வூதியத் திட்டம் யாழ்ப்பாணத்தில் நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்பிப்பு நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு கணக்குகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இத்திட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான ஓய்வூதியத்திற்கான கொடுப்பனவுகளை பெற்றோர்கள் வழங்கி வரும் சந்தர்ப்பத்தில் அச்சிறுவர்கள் 60 வயதைப் பூர்த்தி அடைந்ததும் குறிப்பிட்ட தொகையை செலுத்தப்பட்ட பணத்திற்கு ஏற்ப ஒய்வூதியமாக பெற்றுக் கொள்ள முடியும் என சமூக பாதுகாப்புச்சபையின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பி.பிரதீபன் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .