2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ பஸ்-மோட்டார் சைக்கிள் விபத்து: யுவதி பலி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமத்தி தங்கராசா

இராணுவத்தை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் பலியானதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் யாழ். தட்டாதிரு சந்தியில் இன்று திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கோப்பாய் ராஜவீதியைச்சேர்ந்த எஸ்.தீபிகா(வயது-20) என்ற யுவதியே பலியாகியுள்ளார்.

அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த யுவதி யாழ.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்.போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .