2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.மாநகர தற்காலிக ஊழியர்கள் உண்ணாவிரதம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாநகர சபையில் கடமையாற்றி வந்த தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.மாநகர சபை முன்பாக தற்காலிக ஊழியர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். மாநகர சபை தற்காலிக கடமையாற்றிய ஊழியர்களை கடமையிலிருந்து நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து,  யாழ். மாநகர சபையின் சுகாதாரக் குழுத் தலைவர் சுதர்சிங் விஜயகாந் தலைமையில் தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்து செவ்வாய்க்கிழமை (1) காலை முதல் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சுகாதார குழுத் தலைவர் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாநகர சபையில் 2002 ஆம் ஆண்டு சீ.வி.கே.சிவஞானம் ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து யாழ்.மாநகர சபையில் கடமையாற்றியவர்கள இங்கு இருக்கின்றார்கள்.

ஆனால் 168 பேருக்கு நேர்முகப் பரீட்சை மூலம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளர் எழுத்து மூலம் தெரிவித்திருந்தார்.

10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு நியமனங்கள் வழங்காமல், கடந்த காலங்களில் இரண்டு தடவைக்கு மேல் நேர்முக பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ள செயற்பாடானது, பொருத்தமற்றதொன்றாகும்.

மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் மாநகர சபையின் பாதுகாப்பு சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கும்; நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், தற்காலிக ஊழியர்களையும் மாநகர சபையில் இருந்து நிறுத்திவிட்டு இன்று முதல் தனியார் கம்பனிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.

இந்நிலையில் இன்று 300 முதல் 400 பேர் வரையிலான சிற்றூழியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

எனவே, உடனடியாக நிறுத்தப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், அ.பரம்சோதி ஆகியோர் ஊழியர்களுடன் பணிநீக்கம் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .