2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.விபத்து; இராணுவ சாரதிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

விபத்தினை ஏற்படுத்திய இராணுவ பஸ் சாரதியான இராணுவ சிப்பாயை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணித்தார்.

யாழ். காங்கேசன்துறை வீதி தட்டாதெரு சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு இராணுவ பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதியொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார்.

யாழ்.போக்குவரத்து பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை யாழ். நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததுடன், இராணுவ சிப்பாயையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, நீதவான் விபத்துச் சம்பவம் தொடர்பாக உடனடியாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வராததிற்கு பொலிஸார் மீது அதிருப்தி தெரிவித்ததுடன், பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி டி சில்வா நீதிமன்றத்திற்கு அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென யாழ். போக்குவரத்து பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படும் இராணுவச் சிப்பாயை இம்மாதம் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .