2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளையர்களால் தள்ளி விழுத்தப்பட்ட பெண் வைத்தியசாலையில்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மோட்டார் சைக்கிளிலில் வந்த இரு கொள்ளையர்களால் பெண்ணொருவர் தள்ளி விழுத்தப்பட்டு கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் மருத்துவ மாதுவாக கடமையாற்றும் உடுவில் ஆலடிப்பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கடமை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணை சைக்கிளிலிருந்து தள்ளிவீழ்த்திவிட்டு தாலிக்கொடியை அறுக்க முயன்றுள்ளனர்.

இதன்போது, குறித்தப் பெண் கூக்குரலிடவே கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

பின் அயலவர்களின் உதவியால் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .