2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானவர் விடுதலை

Super User   / 2013 ஒக்டோபர் 23 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுமித்தி தங்கராசா

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நபரை யாழ். மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

தாளையடி வடக்கு மருதங்கேணி பகுதியை சேர்;ந்த  39 வயதான நாகமுத்து செல்வராசா கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து ஆயுதப் பயிற்சிகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மேற்படி வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சுமத்தப்பட்டவரால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக அழிக்கப்படவில்லை என தெரிவித்து அதனை மேல் நீதிமன்றம் நிராகரித்தது.

தொடர்ந்து குறித்த வழக்கு தொடர்பாக வேறு சான்றுகள் உள்ளனவா எனப் பார்ப்பதற்காக இன்று புதன்கிழமை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வேறு சான்றுகள் இல்லாத காரணத்தினால் குறித்த நபரை விடுதலை செய்யுமாறு  நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 40 வயதான மாகதேவன் ரமணதாஸ் என்பவரும் மேற்குறித்த திகதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 மேற்படி வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி குற்றஞ்சுமத்தப்பட்டவரால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்படவில்லை எனக் கருதி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை நிராகரித்ததுடன் மேற்படி வழக்கினை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .