2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வடமாகாணத்தைச் சேர்ந்த ஐவர் தேசிய மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர்களாக தெரிவு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் இலங்கை மெய்வல்லுநர் தேசிய தொழில்நுட்ப அலுவலர்களாக வடமாகாணத்தைச் சேர்ந்த ஐவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி போதனா ஆசிரியர்களான ஜீ.டி.மதியழகன் மற்றும் சிவகௌரி சசிகரன், கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ர.சிறிரமணன், கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச்  சேர்ந்த சி.சிவச்செல்வன், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எம்.சசிகுமார் ஆகியோரே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச மெய்வல்லுநர் தரம் - 1 பயிற்சிநெறியை இவர்கள்  2011ஆம் ஆண்டு  பூர்த்திசெய்ததுடன், மெய்வல்லுநர் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தனர்.

தொடர்ந்து இவர்கள் ஜவரும் கடந்த 2 வருடங்களாக  மெய்வல்லுநர் அலுவலர்களாக கடமையாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 07ஆம் திகதி கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவகத்தில் நடைபெறவுள்ள சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தேசிய தொழில்நுட்ப அலுவலர்களாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .