2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இரு கடைகள் உடைத்து திருட்டு

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள இரு கடைகள் நேற்றிரவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. மேற்படி கடையின் உரிமையாளர்கள் இன்று காலை கடையை திறக்கச் சென்ற போதே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ஒரு கடையில் பின்கதவு உடைக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் பெறுமதியான வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளன. குறித்த கடையிலிருந்து சுமார் 100 மீற்றருக்கு அப்பாலுள்ள இன்னொரு கடையின் கூரையினை பிரித்து கயிறு கட்டி உள்நுழைந்த திருடர்கள் அங்குள்ள பாதுகாப்பு இரும்பு பெட்டிகளை உடைத்துள்ளனர்.

எனினும் அதில் எதுவும் இல்லாத  நிலையில் கண்ணாடி பெட்டிக்குள் இருந்த ஒன்றரை பவுண் பெறுமதியான தேடுகள் மற்றும் மோதிரங்களை திருடப்பட்டுள்ளன. இந்த கடையின் உரிமையாளர் நேற்றிரவு கடையினை பூட்டிச் செல்லும் போது கடையில் காணப்பட்ட பெறுமதியான நகைகளை வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்படி இரு கடைகளின் உரிமையாளர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக இப்பகுதியில் பல கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் இது வரையில் பொலிஸார் எவரையும் கைதுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .