2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குத்தகைக் கட்டணம் செலுத்தத் தவறிய முச்சக்கரவண்டிகள் பறிமுதல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 08 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -சுமித்தி தங்கராசா


குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கான மாதாந்தக் கட்டணத்தை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும்  முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 7 பேரிடமிருந்து முச்சக்கரவண்டிகளை யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் யாழ். நகரப்பகுதியில் உள்ள பிரபல குத்தகை வழங்கும் கம்பனியின் நிர்வாகி முறைப்பாடு செய்தார்.  இதனைத் தொடர்ந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு மாதாந்தக் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 7 பேரிடமிருந்து முச்சக்கரவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முச்சக்கரவண்டிகளை குத்தகை அடிப்படையில் வாங்கியவர்கள் தெரிவிக்கையில்,

இடைத் தரகர்களின் ஊடாக முச்சக்கரவண்டிகளை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து பல மாதங்களாக தொடர்ந்து குத்தகைக் கட்டணங்களைச் செலுத்தியிருந்திருந்ததாகவும் கூறினர்.  இருப்பினும் தற்போது முச்சக்கரவண்டிகளை வாடகைக்கு அமர்த்துபவர்கள் குறைவாகக் காணப்படுகின்றமையால் குத்தகைக் கட்டணத்தை உரிய தவணையில் செலுத்த முடியாமல் போயுள்ளது.

மேலும், நேற்றுமுன்தினம் புதன்கிழமை  குத்தகைக்கட்டணம் செலுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் முச்சக்கரவண்டிகளை குத்தகை அடிப்படையில் வாங்கியவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ்;ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவிக்கையில்,

மேற்படி 7 முச்சக்கரவண்டி உரிமையாளர்களும்; குத்தகை அடிப்படையில் வாங்கியிருந்த முச்சக்கரவண்டிகளை வேறு நபர்களிடம் விற்பனை செய்து  பணம் பெற்றுள்ளதாகவும் அதற்கான உரிய குத்தகைக் கட்டணங்களை பல மாதங்களாகச் செலுத்தவில்லை எனவும் யாழ். நகரப்பகுதியில் உள்ள பிரபல குத்தகை வழங்கும் கம்பனியின் நிர்வாகி முறைப்பாடு செய்ததாகக் கூறினர்.

இந்த நிலையில், குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கான மாதாந்தக் கட்டணத்தை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 7 பேரிடமிருந்து தாங்கள் முச்சக்கரவண்டிகளை பறிமுதல் செய்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .