2025 ஜூன் 23, திங்கட்கிழமை

போரினால் அழிந்த தொழிற்சாலைகளை மீண்டும் செயற்படுத்துமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 08 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

போரினால் அழிவடைந்த தொழிற்சாலைகளை மீண்டும் தொழிற்படச் செய்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை பன்மடங்காக உயர்ந்த அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் இன்று வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார்.

யாழ். குருநகர் பகுதியில்; இன்று நடைபெற்ற ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 112ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராக இருந்த காலத்தில் பல தொழிற்சாலைகளை நிறுவிய பெருமைக்குரியவர் என்பதால் அவர் வழியை பின்பற்றி நாம் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அந்த வகையில், போர் காரணமாக அழிந்து போன தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களை மீண்டும் நிறுவி ஏற்றுமதி, இறக்குமதிகளை வலுப்படுத்த வேண்டும்.

இத்துறைகளை மீள இயங்க வைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் பெரிய பங்களிப்பு இருக்கின்றது.ஆனால் தற்போது தமிழ் தேசிய மக்கள் முண்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செயற்படுகின்றது.

இதனை தவிர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் உரிமைக்காகவும் ஒற்றுமைக்காகவும் போராட முன்வர வேண்டும்' என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .