2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதி சாரணர் விருதிற்கான நேர்முகத்தேர்வு

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


ஜனாதிபதி சாரணர் விருதிற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

2013ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சாரணிய விருதிற்கு வடமாகாணத்திலுள்ள மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று செவ்வாய்கிழமை (19) யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்நேர்முகத் தேர்வு சாரணிய அபிவிருத்தி உதவி பிரதம ஆணையாளர் எஸ்.ஏ.அமரசிங்க,  தேசிய நிகழ்ச்சி ஆணையாளர் சரத்கொட கந்தராச்சி, அலுவலக ஆணையாளர் காமிணி கருணாரத்ன, அலுவலக ஆணையாளர்களான ரூவான் ஆரியரத்தின, எஸ்.சவுந்தரராஜன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.

மேற்படி நேர்முகத் தேர்வுக்கு யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 சாரணிய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

கடந்த வருடங்களில் ஜனாதிபதி சாரணிய விருதிற்கான சாரணிய மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு கொழும்பிலுள்ள சாரணியத் தலைமையகத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .