2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் பெண்கள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ். மாவட்டத்திலுள்ள  பெண்கள் அமைப்புக்கள் இன்று திங்கட்கிழமை (25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டியுமே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்பாக சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'பெண்களுக்கு எதிரான வன்முறை அற்ற சமுதாயத்தை எமது எதிர்காலத்தில்; ஆக்குவோம்', 'நாம் ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோம்'இ 'சட்டமூல அமுலாக்கம் எங்கே? அதை உறுதிப்படுத்தியவர்கள் எங்கே' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .