2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

Super User   / 2013 நவம்பர் 25 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பிரதேசத்தில் ஐந்து கிளைமோர் குண்டுகள் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய், மத்தி குமரத்தோட்ட பகுதியிலேயே இந்த  கிளைமோர் குண்டுகள் இராணுவத்தினரால் மீட்டுள்ளன.

தோட்டக் காணியொன்றில் கட்டிடம் அமைப்பதற்காக தோண்டிய போது மேற்படி குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் காணி உரிமையாளர் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் இந்த  குண்டுகளை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .