2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாவீரர்களுக்கு கரவெட்டி பிரதேச சபையில் அஞ்சலி

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


மாவீரர்களுக்கான அஞ்சலி கரவெட்டி பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக பெண்கள் கொடுமை தினமான இன்று அதனை அனுஷ்டிப்பதற்கான நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசு தலைமையில் கரவெட்டி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட விடுதலை புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியா மற்றும் விடுதலை புலிகளின் போராளிகளாகவிருந்து உயிர் நீர்த்த மாவீரர்களுக்காக பிரதேச சபை உறுப்பினர் ஆள்வாப்பிள்ளை மதியரசன் தீபமேற்றி பூப்போட்டு அஞ்சலி செலுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .