2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விடுதி முற்றுகை; மேலும் மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 05 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகரசபையின் அனுமதி பெறாமல், யாழ். அரியாலை ஆனந்தன் கடை வீதியில் இயங்கிவந்த விடுதியிலும்; யாழ். அம்மன் வீதியில் இயங்கிவந்த மசாஜ் நிலையத்திலும் கைதுசெய்யப்பட்ட 08 பேரில் பெண்கள் இருவரையும் ஆண் ஒருவரையும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.

மேற்படி மூவரையும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (03); ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கிடையில், மேற்படி 08 பேரில்  பெண்கள் மூவரையும் ஆண்கள் இருவரையுமாக 05 பேரை எதிர்வரும் 17ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மேற்படி  நீதவான் திங்கட்கிழமை  (03) உத்தரவிட்டிருந்தார்.

மேற்படி விடுதியிலும் மசாஜ் நிலையத்திலிருந்தும் அநுராதபுரம், மாத்தளை, கிளிநொச்சி, யாழ். உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 வயதுக்கும் 36 வயதுக்கும்  இடைப்பட்ட 05 பெண்களையும் விடுதி மற்றும் மசாஜ் நிலைய முகாமையாளர்கள் இருவருடன் ஆண் ஒருவரையும் யாழ்ப்பாண பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (02) கைதுசெய்தனர்.

வடமாகாணப் பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸின் உத்தரவுக்கமைய சென்ற பொலிஸ் குழுவினர் மேற்படி விடுதியையும் மசாஜ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.  இம்முற்றுகையின்போது,  பொலிஸாருடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் உள்ளிட்டவர்களும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனந்தி சசிதரன் தனது நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டதாக யாழ். பொலிஸ் நிலையத்தில்  மசாஜ் நிலைய உரிமையாளர் முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .