2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழில் கைக்குண்டுகள் மீட்பு

Super User   / 2014 மார்ச் 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் 2ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து 3 கைக்குண்டுகள் இன்று (05) காலை மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிணற்றினைத் துப்பரவு செய்யும் போது, கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு அறிவித்தார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பொலிஸார்,  இராணுவத்தினரின் உதவியுடன் குண்டுகளை மீட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .