2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வசந்தி அதிக வாக்குகள்: ஜனாதிபதியின் தெரிவிற்காக காத்திருப்பு

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழகத்தின் 9 ஆவது துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 9 ஆவது துணைவேந்தரினை தெரிவு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை (8) யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இம்முறை துணைவேந்தர் பதவிக்காக தற்போதைய துணைவேந்தராக இருக்கும் வசந்தி அரசரட்ணம், பேராசிரியர் குணபாலன், பேராசிரியர் விக்னேஸ்வரன், பேராசிரியர் ஆழ்வார்பிள்ளை, ரட்ணஜீவன் கூல் ஆகியோர் போட்டியிட்டனர்.

துணைவேந்தரினை தெரிவு செய்வதற்காக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களை உள்ளடக்கிய 25 பேர் கொண்ட பல்கலைக்கழக மூதவை பேரவைக்குழு இருக்கின்றது. மூதவைப் பேரவைக்குழவில் இருக்கும் ஒவ்வொருவருக்கு 3 வாக்குகள் அளிக்க உரிமைகள் உண்டு.

அதனடிப்படையில் வாக்களிப்பு நடைபெற்றது. இதில் வசந்தி அரசட்ணத்திற்கு 24 வாக்குகளும், குணபாலனுக்கு 16 வாக்குகளும், விக்னேஷ்வரனுக்கு 13 வாக்குகளும், ஆழ்வார் பிள்ளை, ரட்ணஜீவன் கூல் ஆகியோருக்கு தலா 2 வாக்குகளும் கிடைத்தன.

வாக்கு எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆணைக்குழு பரிசீலனை மேற்கொண்டு, உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும்.

தொடர்ந்து உயர்கல்வி அமைச்சு தங்கள் பரிசீலனைகளை மேற்கொண்டு, ஜனாதிபதியிடம் கையளிக்கும். இறுதியில் யாரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி தீர்மானிப்பார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .