2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சைவசமய பரிசில் நாள்

Kogilavani   / 2014 மார்ச் 09 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


தென்மராட்சி கல்வி வலயம் நடத்தும் 2014 ஆம் ஆண்டிற்கான சைவசமய பரிசில் நாள் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில்  சனிக்கிழமை (08) நடைபெற்றது.

சைவ சமய ஆசிரிய ஆலோசகர் இ.இராலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம், சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சி.சிவநாதன், ஓய்வு நிலை அதிபர் த.கந்தையா, ஓய்வு நிலை அதிபர் சா.நகுலேஸ்வரன், சாவகச்சேரி மகளிர் கல்லூரி அதிபர் ல.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவர்களின் நடனம், மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களின் நடனம், கைதடி முத்துகுமராசுவாமி மகா வித்தியாலய ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடர்ந்து சைவசமயப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .