2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

எழுதுமட்டுவாள் பகுதிக்கு மின்விநியோகம்

Super User   / 2014 மார்ச் 13 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதிக்கு 19 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மின்விநியோக திட்டங்களினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (12) ஆரம்பித்து வைத்தார்.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட மேற்படி பிரதேசத்தில் இதுவரையில் 534 பேர் மீளக்குடியேறியுள்ளனர்.

மேற்படி பிரதேச மக்கள் இதுவரை காலமும் மின்சார வசதி இன்றி வசித்து வந்த நிலையில், வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்படி பகுதிக்கு தற்போது மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மின்விநியோக நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்த அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், 'வடபகுதியின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை கொண்டு வடமாகாணத்தில் சேதமடைந்துள்ள உள்ளக வீதிகள் வடமாகாண சபையால் மீள்புனரமைப்புச் செய்யப்பட வேண்டும்' என்றார்.

'எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை எந்தெந்த வகைகளில் மேம்படுத்த முடியுமோ அதையே நாம் முன்னெடுத்து வரும் நிலையில் அந்தந்தப் பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பிலும் மிகுந்த கவனம் செலுத்துவதுடன், செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனால், நாம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் குறைகாணும் விதத்தில் சுயலாப அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். இதுவிடயம் தொடர்பில் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

'இப்பகுதியில் வாழும் மக்கள் இங்குள்ள உள்ளகவீதிகளை புனரமைத்து தருமாறு எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருந்தபோதிலும், உள்ளக வீதிகளின் புனரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது வடமாகாண சபையின் கரங்களிலேயே தங்கியுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்திற்கே அதிகளவு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிதியின் ஊடாக உள்ளக வீதிகளின் புனரமைப்பு உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஈ.பி.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன், வடக்கின் வசந்தம் மின்பொறியியலாளர் கோசல ஜயதிலக, ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சூசைமுத்து அலெக்ஸான்டர் சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .