2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சங்கானை சந்தை குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு

Menaka Mookandi   / 2014 மார்ச் 14 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்., சங்கானை சந்தையின் தாங்கியிலுள்ள நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்பது தெரியவந்ததையடுத்து குறித்த சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக சங்கானைப்பகுதியிலுள்ள வேறொரு கிணறு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட நீரையே குடிநீர்ப் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக வலி.மேற்கு (சங்கானை) பிரதேச சபைத் தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் இன்று (14) தெரிவித்தார்.

சங்கானைச் சந்தையிலிருக்கும் நீர்த்தாங்கிக்கு நிரப்பப்படும் நீர், மலசலகூடத்திற்கு அண்மையிலுள்ள கிணறு ஒன்றின் மூலமே பெறப்படுவதினால் குடிநீருக்கு உகந்ததில்லையென சங்கானை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ரி.மோகனகுமாரினால், வலி.மேற்கு பிரதேச சபையின் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் சபைச் செயலாளர் ஆகியோருக்கு கடந்த வாரத்தில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

அக்கடிதத்தில் சந்தையிலுள்ள குழாய்கள் மூலம் வரும் நீரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பருக வேண்டாமென்றும், அந்நீரினை மற்றய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் படியும் அறிவித்தலினை பகிரங்கமாக சந்தையின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தும்படியும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளரிடம் இன்று தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மேற்படி குடிநீருக்கான நீரை நிரந்தரமாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவினை தெரியப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .