2025 ஜூன் 28, சனிக்கிழமை

சல்லிக் கற்களுடன் சென்ற ரயிலில் மோதியவர் மரணம்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்.கொடிகாமம் பகுதியில் ரயில் பாதைக்கு அமைப்பதற்கு தேவையான சல்லிக் கற்களைக் கொண்டு வந்த ரயிலில் மோதி படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தரான கொடிகாமம் நாவலடியினைச் சேர்ந்த சிவராசா ஜெகன் (32) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் வந்துகொண்டிருப்பது அறியாமல் திடிரென ரயில் கடவையினைக் கடக்க முற்பட்ட வேளையிலே ரயில் இவரை இன்று காலை மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இவர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்றுமாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .