2025 ஜூன் 28, சனிக்கிழமை

புகைத்தலுக்கு எதிரான பேரணி

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஐ.நேசமணி


புகைத்தல் எதிர்ப்பை வலியுறுத்தி 'புகை மரணக் குகை' என்ற தொனிப்பொருளிலான பேரணியொன்று வெள்ளிக்கிழமை (14) காரைநகரில் நடைபெற்றது.

காரைநகர் பிரதேச செயலகம், காரைநகர் பிரதேச சபை மற்றும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், காரைநகர் யாழ்ரன் கல்லூரி, இந்துக் கல்லூரி மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மேற்படி கல்லூரிகளின் சாரணர்கள், காரைநகர் பிரதேச செயலர் திருமதி தே.பாபு, காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் மு.வே. ஆனைமுகன், காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் புகைத்தல் எதிர்ப்பை வலியுறுத்திய பதாகைகளையும் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.

அத்துடன், புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை வெளிப்படுத்தி சிவதொண்டர் மற்றும் சிவமங்கையர் அமைப்புக்களால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இங்கு விநியோகிக்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .