2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஊர்காவற்துறை இறங்குதுறையை புனரமைக்க அமைச்சர் நடவடிக்கை

Kanagaraj   / 2014 மார்ச் 17 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஊர்காவற்துறை இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது இறங்குதுறைப் பகுதியில் மீளப் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேதமடைந்த இந்திய ரோலர் படகுகளை அப்பகுதியிலிருந்து அகற்றுவது மற்றும் அப்பகுதியில் மூழ்கியுள்ளதும், சேதமடைந்துள்ளதுமான படகுப்பாதைகளை அங்கிருந்து அகற்றுவது போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அவற்றை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது பாவனையிலுள்ள படகுப் பாதையின் பயன்பாடுகள் மற்றும் அதன் புனரமைப்பு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அருகாமையில் பொலிஸ் நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள், அது விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி. எழிலரசி அன்ரன் யோகநாயகம், ஊர்காவற்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஜெயகாந்தன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .