2025 ஜூன் 28, சனிக்கிழமை

கால்வாய் நோய் தடுப்பூசிக்கான நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கால்வாய் நோய்க்கு தடுப்பூசிகள் போடுவதற்கான நடமாடும் சேவை  யாழ். இணுவில் மஞ்சத்தடி வட்டுவினி பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு அருகிலும்;; இணுவில் மேற்கு பகுதியிலும் வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ளதாக கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.விமலகுமார்  தெரிவித்தார்.

உடுவில் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசிகள் போடாதுள்ள  மாடுகளுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மேற்படி நடமாடும் சேவையில் கலந்துகொண்டு மாடுகளின் சொந்தக்காரர்கள்  தங்களது மாடுகளுக்கு தடுப்பூசிகளை  போட்டுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி பிரிவில் 4,300 இற்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இவற்றில் 2,500 இற்கும் மேற்பட்ட மாடுகளுக்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் நடமாடும் சேவையின் மூலம் போடப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, கால்வாய் நோய் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த செயற்கை சினைப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது மீண்டும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .