2025 ஜூன் 28, சனிக்கிழமை

கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு உடனடியாக குடிநீர்விநியோகம் மேற்கொள்ளப்படும் என கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா.வை.குகராஜா இன்று (23) தெரிவித்தார்.

கரைச்சி பிரதேச சபையால் கரைச்சி பிரதேசத்திற்குள்பட்ட பொன்னகர், மலையாளபுரம், கிருஷ;ணபுரம், மாயவனூர், வட்டக்கச்சி ஆகிய பகுதிகளில்; குடிநீர் தாங்கிகள் வைக்கப்பட்டு நீர்விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தாங்கிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் தாங்கள் குடிநீருக்கு சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கரைச்சி பிரதேச சபைத் தலைவரிடம் இன்று (23) தொடர்பு கொண்டுகேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

குறித்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கிகள் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற புளியம்பொக்கனை ஆலயத்தின் பொங்கல் திருவிழாவின் விசேட தேவைகளுக்காக அங்கிருந்து உடனடியாக எடுக்கப்பட்டிருந்தது.

பொங்கல் திருவிழா நிறைவடைந்தமையால் குறித்த பகுதிகளுக்கு உடனடியாக மீண்டும் தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டு நீர் விநியோகம் மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .